"பட்டம் பற பற"... வட்டமாக நின்று பட்டம் விட்டு கலகலக்க வைத்த "குட்டி தேவதைகள்"!
கரூர்: கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்செல்ஸ் ஆங்கிலப் பள்ளி மாணவ மாணவியர் வட்டமாக நின்று பட்டம் விட்டு கலகலக்க வைத்த நிகழ்ச்சி அப்பள்ளியில் நடந்தது.
இப்பள்ளியின் மழலையர் பிரிவில் பட்டம் விடும் விழா நடத்தப்பட்டது. பள்ளி வளாக்ததில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை கையில் ஏந்தியவாறு பட்டம் போல வரிசையாக நின்று சுமார் 120 மாணவ - மாணவியர்கள் பட்டம் விட்டு அசத்தினர்.
இந்தப் பட்டம் விடும் விழா குறித்து பள்ளி ஆசிரியை பத்மபிரியா கூறுகையில், காகிதங்களை மறு சுழற்சி செய்யும் விதமாக பல்வேறு செய்தித்தாள்களை பட்டமாக வடிவமைத்து அதில் தேசிய கொடி , தேசிய பறவை மயில் தோகை மற்றும் பல்வேறு வண்ணங்களை தீட்டி இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே பட்டங்கள் பறப்பது போல் பள்ளி மாணவ - மாணவியரும் எதிர்காலத்தில் உயர்ந்த பொறுப்புகளை ஏற்று வாழ்வில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்பதாகும் என்றார்.