கரூர் பள்ளி, கல்லூரியில் கலக்கலான பொங்கல் கொண்டாட்டம்!
கரூர்: கரூர், பரணிபார்க் கல்விக் குழுமங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமங்களின் சேர்மன் எம்.குமாரசாமி தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக் குழுமங்களின் தாளாளர் சா.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தனர்.

பரணிபார்க் கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணின் பேசுகையில், "தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரத்தை பறைசாற்றும் பொங்கல் திருநாள் ஒவ்வோரு வருடமும் பரணிபார்க் கல்விக் குழுமங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரணிபார்க் கல்விக் குழும ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். மேலும் பரணி பார்க் பள்ளி, பரணி வித்யாலயா பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து மொத்தம் 23 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், சூரிய பகவானுக்கும் படைக்கபட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
பொங்கல் விழாவின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பானை உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பரணிபார்க் பள்ளி முதல்வர் க.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சு.சுதாதேவி நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் மு.சுரேஷ், முதல்வர்கள், துணை முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications