கரூரில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – பக்தர்கள் அதிர்ச்சி
கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரத்தில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீபகவதியம்மன் ஆகிய அம்மன்கள் ஓரே கருவறையில் உள்ள அபூர்வ கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மேலும், அருகில் இருக்கும் பிடாரி அம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது, அதிகாலை நேரமானதால் அப்பகுதியில் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல்களை பாடியவாறு கோவிலுக்கு வந்தனர்.
இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த இரண்டு கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.