கச்சத் தீவு அந்தோணியார் கோயில் விழா நிறைவு.. ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று காலை சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்தியா-இலங்கை ஆகிய இருநாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா, நேற்றுமுன்தினம் தொடங்கியது. இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பேராயர் சவுந்திரநாயகம், கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்பதற்காக 4 ஆயிரத்து 336 பேர், தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே கச்சத்தீவு செல்ல ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் தமிழக பக்தர்கள் திரண்டு வந்தனர்.

கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவு செல்லும் ஒவ்வொருவருக்கும் லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு 112 விசைப் படகுகளில் 4 ஆயிரத்து 3 பயணிகள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.
கச்சத்தீவு சென்ற தமிழக பக்தர்களுக்கு இந்தியா-இலங்கை நாடுகளின் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
முதல் நாளான நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றம் முடிந்த பிறகு கச்சத்தீவு ஆலயத்தை சுற்றி 12க்கும் மேற்பட்ட இடங்களில் இருநாட்டு பங்கு தந்தையர்கள் மற்றும் இருநாட்டு மக்கள் கலந்து கொள்ளும் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது.
இரவு 8 மணி அளவில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இருநாட்டு மக்களும் சேர்ந்து தோளில் தூக்கியபடி தேர்பவனியாக ஆலயத்தை சுற்றி வந்தனர். இரவில் இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் சந்தித்துப்பேசி உறவுமுறைகளை பரிமாறி கொண்டனர்.
விழாவின் 2வது நாளான நேற்று (ஞாயிறு) காலை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இதில் இருநாடுகளை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. அதன் பின்னர் இருநாட்டு மக்களும் படகுகளில் அவரவர் நாடுகளுக்கு புறப்பட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications