பெத்த குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு தள்ளிய கந்து வட்டியின் கொடூரம்!
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமல் பெற்றோரே பிள்ளைகளுக்கும் தீ வைத்து தாங்களும் தீக்குளித்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Recommended Video

சென்னை : நெல்லையில் தாய் தந்தையரே கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் பெற்ற பிள்ளைகளுக்கு உடலில் தீ வைத்து கொளுத்திவிட்டு தாங்களும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் தமிழக மக்களின் மனங்களை கனமாக்கியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமைக்கு 6 முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மனமுடைந்த இசக்கி முத்து, தன்னுடைய மனைவி, பிள்ளைகள் 2 பேர் மீது தீ வைத்துள்ளார். ஒரு லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியதற்கு லட்சத்து 45 ஆயிரம் வரை திருப்பிக் கொடுத்தும் கந்துவட்டி கொடுமை தீரவில்லை.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதோடு போலீசார் இசக்கி முத்துவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கி முத்து நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த போது கையில் வைத்திருந்த பையில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம்
ஆனால் இதில் கொடுமையான விஷயமாக பார்க்கப்படுவது, இசக்கி முத்துவே தன்னுடைய பிள்ளைகள் மேல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். சிறு காயம் என்றாலே அலறும் பிஞ்சுகள் தந்தையே தீ வைக்கும் அந்த தருணத்தில் எந்த மனநிலையில் இருந்திருக்கும். உடலில் நெருப்போடு ஓடி வந்த அந்தக் குழந்தைகளின் காட்சி இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்பதற்கு ஆளே இல்லையா என்பதை கேட்பதாக இருந்தது.

இயலாமையின் வெளிப்பாடு
என்ன தான் பெற்றோருக்கு கந்தவட்டி கொடுமையால் வெறுப்பு, இயலாமை, கோபம் இருந்தாலும் அதை இப்படியா குழந்தைகள் மீது காட்டுவது என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆசை ஆசையாய் பெற்றெடுத்த இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி தீக்காயத்தின் வீரியம் தாங்காமல் உயிரை விட்டுவிட்டனர். இசக்கி முத்து மட்டும் உயிருக்கு போராடி வருகிறார்.

நடவடிக்கை ஏன் இல்லை?
6 முறை மனு கொடுத்து போராடிய இசக்கிமுத்துவிற்கு நம்பிக்கை அளிக்காதது யாருடைய குற்றம். வாழ்வாதாரத்திற்கே போராடும் மக்களிடம் இருந்து கந்துவட்டி என்ற பெயரில் பணத்தை பிடுங்கித் தின்னும் பெருச்சாலிகளுக்கு உதவும் அதிகார வர்க்கம் ஏன் ஏழைகளின் துயரை துடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

விழிக்குமா அரசு
தன்னுடைய குடும்பத்தினரை காவு கொடுத்து நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் கந்துவட்டி அவலங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இசக்கிமுத்து. இனி இதுபோன்றதொரு தீக்குளிப்பு சம்பவம் நடக்காமல் இருக்க அரசும், அதிகாரிகளும் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications