கேரள கோவில் தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது...: ஜெ. வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள கோவில் தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது என தமிழக முதல்வர் ஜெயலலிதா வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவில், வானவேடிக்கையின் போது இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், திருவிழாவில் பங்கேற்ற 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

Kerala fire accident : Jaya condoles

சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த தீவிபத்து துரதிர்ஷ்டவசமானது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஜெயலலிதா, மீட்புப் பணியில் கேரள அரசுக்கு உதவ, தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+