பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் - கேரள அரசால் தமிழக விவசாயிகளுக்கு சிக்கல்
பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு திட்டமிட்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பவானி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதற்கு முன்பாக தடுப்பணைகள் கட்டிவிட வேண்டுமென்கிற முனைப்பில் கேரள அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி, சோலையூர், பாடவயல், தீரக்கடவு, சாவடியூர் ஆகிய ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்க கேரள அரசு முடிவு செய்தது.
அப்படி கட்டினால், தமிழகத்தில் பவானி ஆற்றின் நீர்வரத்து குறைந்து திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.

கேரள அரசின் செயல்
எனவே, கேரள அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி பல்வேறு அரசியல் மற்றும் விவசாய இயக்கங்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல், தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறையின் உதவியோடு கேரள அரசு தடுப்பணைகள் கட்டு முடித்தது.

புதிய தடுப்பணைகள்
இந்த தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் கேரளாவில் புதிய தடுப்பணைகள் கட்ட முடியாது என்பதால், மேலாண்மை வாரியம் அமைவதற்குள் மீதம் இருக்கும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கோவையில் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோலையூர் பகுதியில் மூன்றாவது தடுப்பணை கட்டும் பணி தொடங்கியதைக் கண்டித்து, கோவையில் போராட்டம் நடந்தது. அனைத்து கட்சி சார்பில் தமிழக எல்லையான ஆனைகட்டிப் பகுதியில் முற்றுகைப்போராட்டமும் நடத்தப்பட்டது.இதற்கிடையே அடுத்தகட்டமாக திட்டமிட்ட இடத்தை விடுத்து அட்டப்பாடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை
இந்நிலையில், இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications