Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களின் கற்பு குறித்து அவதூறு.. குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு!

பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றார். ஆனால் உறவில் ஈடுபடும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.என்று கூறியிருந்தார்.

Khushboo to be produced in 15 days in a case of defamation of women's virginity: Mettur court

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.

மேட்டூர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 2005ஆம் ஆண்டு குஷ்பு ஆஜரானார். ஆனால் அதன்பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களின் கற்பு குறித்து அவதூறு பேசிய வழக்கில் குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் கற்பு குறித்த குஷ்புவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+