நல்ல வேளை ஜெ. தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கவில்லை, இல்லைனா அதுக்கும் 'ஸ்டிக்கர்' தான்: குஷ்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நல்ல காலம் ஜெயலலிதா தமிழ்த்தாய் சிலையை நிறுவவில்லை. இல்லையென்றால் அதன் நெற்றியிலும் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ஜெரோமுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதிமுக ஆட்சியில் எந்த துறையும் முன்னேற்றம் அடையவில்லை. இதற்கு ஜெயலலிதா தான் காரணம். தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. அதிக ஊழல் செய்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்கள் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு தான். ஊழல் செய்தவர்கள் பலர் தனது கட்சியினர் என தெரிந்தும் ஜெயலலிதா அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தாய் சிலை

தமிழ்த் தாய் சிலை

ஜெயலலிதா அறிவித்தபடி தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கவில்லை. ஒரு வேளை சிலை வைத்திருந்தால் அதன் நெற்றியில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி, கையில் இரட்டை இலையை வைத்திருப்பார்கள் அதிமுகவினர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

2011ம் ஆண்டில் மாற்றத்தை எதிர்பார்த்து அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஜெயலலிதா தான் போட்டியிடும் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது அங்கு மின்தடை ஏற்பட்டது.

மின்மிகை மாநிலம்

மின்மிகை மாநிலம்

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை. தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டது என்று கூறும் ஜெயலலிதாவின் தொகுதியிலேயே மின்வெட்டு ஏற்படுவது வேடிக்கையாக உள்ளது. மின்துறை அமைச்சர் ரூ.575 கோடி ஊழல் செய்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+