Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோச்சடையான் பட விநியோக வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் கோச்சடையான். இந்த படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது.

Kochadaiyaan:SC issues notice to Rajinikanth’s wife Latha

இந்த படத்தை தயாரிக்க, அதன் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டிருந்தார். சில சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதற்கான ஒப்பந்தத்தின் போது 'ஆட் பியூரோ' நிறுவனத்துக்கு 'கோச்சடையான்' திரைப்பட உரிமையை வழங்குவதாக மீடியா ஒன் குளோபல் நிறுவன இயக்குனர் மனோகர் ஒப்புக் கொண்டுள்ளார்.

பட உரிமை வழங்கவில்லைஆனால் 'தங்களிடம் வாங்கிய பணத்தை லதா கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி திரைப்பட உரிமையை கொடுக்காமல் 'ஈராஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அளித்தனர்.

கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்தார். மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது நிதி மோசடி புகார் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்ததை மீறி முரளி மனோகரும் லதா ரஜினிகாந்தும் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றுள்ளதாக ஆட் பீரோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.

ஆட் பீரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று ஆட் பீரோவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து, தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வழங்கிய ஆட் பீரோ நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பிரபுலா சி பந்த் அமர்வு, வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+