ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு.. 4 பேர் அதிரடி கைது.. 5 பேர் தலைமறைவு !
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தொடர்புடையதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குன்னூர்: கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தொடர்புடையதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார்.
கடந்த 24-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிஷனிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
தீவிர வேட்டை
கோத்தகிரியில் உள்ள எஸ்டேட்டை நோக்கி வந்த சொகுசு கார்கள் குறித்து அங்குள்ள சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.
பக்கத்து இடங்களில் விசாரணை
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள பெட்ரோல் நிலயைங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் நீலகிரிக்கு அருகில் உள்ள கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வரைப்படம்
மேலும் காயமடைந்த காவலாளி கிஷன்பகதூர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டரில் வரைப்படம் வரைந்து அதை வைத்து தேடி வந்த நிலையில் நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 பேரிடம் விசாரணை
விசாரணை வளையத்தில் சிக்கிய 8 பேரில் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார், முக்கிய குற்றவாளியான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், டீபு, சந்தோஷ், சதீஷன் ஆகிய 4 பேரை கூடலூர் தேவாலா பகுதிக்கு அழைத்து வந்த போலீஸார் தொடர்ந்து 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்க பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் வயநாடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications