ரஜினி கட்சியில் சேர சில அமைச்சர்களுக்கு ஆர்வம்... கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதில் இணைவதற்கு சில அமைச்சர்கள் ஆர்வமுடன் உள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதிமுக அமைச்சர்களில் சிலர் ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் செல்ல காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ரஜினிக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் கருத்து கூறிவருவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் அதனை அரசு பரிசீலிக்கவில்லை என்றும், தனது கோரிக்கையை அமைச்சர்கள் கிண்டல் செய்வதாகவும் புகார் கூறினார்.

மேலும், படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட்டதாகவும், இதற்கு காரணம் தேர்வு முறைகேடு தான் என்றும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்ற போட்டித்தேர்வுகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது இப்போது வெளிச்சத்திற்கு வருவதாகவும், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈஸ்வரன் கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க வகையில் எந்த அறிவிப்புகளும் இல்லை என்றும், கொங்கு மண்டலத்தில் தொழில்துறை அழிந்துவரும் நிலையில் அதனை காப்பாற்ற தமிழக நிதி நிலை அறிக்கையில் ஒரு அறிவிப்பு கூட இடம்பெறாதது பெரும் ஏமாற்றம் தருவதாகவும் கூறினார். நாட்டில் பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளதால் அதனை திசை திருப்பும் நோக்கில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளதாக ஈஸ்வரன் சாடினார்.
அரசு நிர்வாகத்தின் மீதுள்ள குறையை மறைக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கூட அதனை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை என சாடினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications