வெள்ளம் வடிந்தது... மீண்டும் கழிவு நீர் கால்வாயாக மாறிய கூவம்
சென்னை: பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கரைபுரண்டு ஓடிய கூவம் ஆற்றின் தாக்கம் இன்னும் அகலாத நிலையில் அது மீண்டும் தன் பொலிவை இழந்து சாக்கடையாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்கு செல்ஃபி எடுத்தவர்கள் தற்போது மூக்கை இறுக்கிப் பொத்திக்கொண்டு பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.
1800-களில் கூவம் கரையோரத்தில், அணிவகுத்து நின்ற மரங்களில் இருந்து நீரில் விழும் மலர்களை கண்டு மகிழ மாலை நேரங்களில் குடும்பமாக மக்கள் வந்து சென்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவ்வாறு பொலிவுடன் காணப்பட்ட கூவம் ஆறு இன்று கழிவு நீர் காழ்வாயாக மாறிவிட்டது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக சுமார் 40 டன் மருத்துவ கழிவுகள் கூவத்தில் கொட்டப்படுகின்றது.மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகளின் மூலமாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன. ஆற்றின் கரைகளில் மட்டும் சுமாராக 5000 குடும்பங்களுக்கு மேல் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இவர்களின் எல்லாவித கழிவுகளும் நேரடியாக கூவதில்தான் கலக்கிறது.
அண்மையில் பெய்த கனமழையின் போது, பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பின. அவற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கூவம் ஆற்றில் கலந்தது. இதனால் இவ்வளவு காலம் சாக்கடையாக இருந்த கூவம் ஆறு சுத்தமாகி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை, சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் புகுந்து வீடுகள் நீரில் மூழ்கின.
தற்போது மழை ஓய்ந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள், கழிவுகள் கலந்து கூவம் ஆற்றை மீண்டும் சாக்கடையாக மாற்றியுள்ளது. இதையடுத்து, சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை உள்ளிட்ட கூவம் ஆறு ஓடும் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரையோரத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கூவம் ஆற்றின் வேரை அறுத்த வரலாறு நம் ஆட்சியாளர்களையே சேரும்
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications