20 ஆண்டுகளுக்குப் பின் பெருக்கெடுத்து ஓடும் கொற்றலை ஆறு - தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவள்ளூர் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் தொடர் மழையால் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதே போன்று ஆரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே திருவள்ளூர் அருகே ஏரிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications