போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்... வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... பொதுமக்கள் அவதி
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது.
Recommended Video

சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் போக்குவரத்து துறை ஊழியர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனை அடுத்து, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். திடீரென்று எந்த வித முன்னறிவிப்புமின்றி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், பள்ளிக்கு சென்ற குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படாததால், வழக்கமாக வெளியூரில் இருந்து வருபவர்கள், கோயம்பேடு மார்க்கெட் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என காலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமும் காலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சிறு வியாபாரிகள் பஸ் இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பூ விற்கும் பெண்கள் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications