எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: கே.பி.முனுசாமி வேண்டுகோள்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே இன்று மாலை கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே இன்று மாலை கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நுற்றுகணக்கான போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்த கட்சிகாரர்களையே தாக்கி உள்ளனர். இதற்கு நான் உங்களை குற்றம் சாட்டவில்லை. இதற்கு காரணமான ஒரு குடும்பத்தையே குற்றம்சாட்டுகிறேன். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications