மனைவியை நீரில் அமுக்கி கொலை செய்த கொடூரன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை நீரில் அமுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் கண்ணன்(36). ஆட்டோ, வேன் ஓட்டி வருகிறார். அவரது மனைவி சுந்தரலட்சுமி(32). அவர்களுக்கு 7 வயது மகன், 4 வயது மகள் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
சுந்தரலட்சுமி வீட்டில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதற்கிடையே சுந்தரலட்சுமியின் தந்தை சுந்தரவடிவேல் போலீசில் தனது மருமகன் மீது புகார் அளித்தார். கண்ணன் சுந்தரலட்சுமியை நீரில் அமுக்கி கொன்றுவிட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்..
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications