கூடங்குளத்தில் தொடரும் உண்ணாவிரதம் – எஸ்.பி.உதயகுமார் மயக்கம்
கூடங்குளம்: அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளூர் வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1,2 வது அணு உலைகளில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகள் நடந்துள்ளதாகவும், அதனை சுய பரிசோதனை செய்ய குழுவை அமைக்க வேண்டும், அணு மின நிலையத்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

3,4வது அணு உலை அமைப்பற்கான பணிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் இயக்க போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பு ஜன 31 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தல அறிக்கை, பேரிடர் மேலாண்மை அறிக்கை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

5 வது நாளாக போராட்டம்
அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் புஷ்பராயன், ஜெயக்குமார், நன்மாறன், முகிலன், ராஜலிங்கம், இடிந்தகரையை சேர்ந்த பெண்கள் மெல்ரேட், சேவியரம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இன்று 5வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
உதயகுமார் மயக்கம்
போராட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் மயங்கி நிலையில் காணப்படுவதாக தகவல் கூறுகின்றன. இதையடுத்து டாக்டர்கள் அவரையும், அவருடன் உள்ளவர்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

கடையடைப்பு
போராட்டம் காரணமாக இடிந்தகரை, கூத்தங்குழி, கூடங்குளம், கூட்டப்புளி, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இடிந்த கரையில் பதற்றம்
அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக கடந்த ஒருவாரகாலமாக கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications