கூடங்குளத்தில் தொடரும் உண்ணாவிரதம் – எஸ்.பி.உதயகுமார் மயக்கம்
கூடங்குளம்: அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளூர் வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1,2 வது அணு உலைகளில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகள் நடந்துள்ளதாகவும், அதனை சுய பரிசோதனை செய்ய குழுவை அமைக்க வேண்டும், அணு மின நிலையத்திக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

3,4வது அணு உலை அமைப்பற்கான பணிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் இயக்க போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பு ஜன 31 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தல அறிக்கை, பேரிடர் மேலாண்மை அறிக்கை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

5 வது நாளாக போராட்டம்
அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் புஷ்பராயன், ஜெயக்குமார், நன்மாறன், முகிலன், ராஜலிங்கம், இடிந்தகரையை சேர்ந்த பெண்கள் மெல்ரேட், சேவியரம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இன்று 5வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
உதயகுமார் மயக்கம்
போராட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் மயங்கி நிலையில் காணப்படுவதாக தகவல் கூறுகின்றன. இதையடுத்து டாக்டர்கள் அவரையும், அவருடன் உள்ளவர்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

கடையடைப்பு
போராட்டம் காரணமாக இடிந்தகரை, கூத்தங்குழி, கூடங்குளம், கூட்டப்புளி, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இடிந்த கரையில் பதற்றம்
அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக கடந்த ஒருவாரகாலமாக கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications