குலசேகரப்பட்டிணத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம்... 'நாசா' தகவல்

இந்தியாவின் 3வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரீசிலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ இயக்க அமைப்பு வாளகம் உள்ளது. இந்த வாளகத்தை உயர்த்தி அறிவிக்கும விழா நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில்,
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ இயகக அமைப்பு மையம் திரவ இயக்க வாளகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனருக்கு உரிய அதிகாரிகள் அனைத்தும் இந்த வாளக இயக்குனருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளி துறையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் 3வது ரக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவுதளம் உள்ளது. தற்போது 3வது ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டிணம் தகுதியான இடம் என்றும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசி்ன் பரீசிலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.
குலசேகரப்பட்டிணத்தில் 3வது ஏவுதளம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் தென்மாவட்டம் அதிக அளவில் முன்னேறும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications