குமரி அனந்தன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்: உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கக் கோரி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், காந்தியவாதியுமான குமரி அனந்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு வழுக்கி விழுந்தார்.
இதில் காயம் அடைந்த அவர் தர்மபுரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது என்றும், போராட்ட தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications