சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டிய பாதுகாவலர் கருணாநிதி... குஷ்பு
கரூர்: அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக மக்கள் படும் வேதனைகளை முன்னிறுத்தியும், சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டியவர் கருணாநிதி தான் என்பதை நினைவூட்டியும் கரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் நடிகை குஷ்பு.
திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கரூர் லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் ம.சின்னசாமியை ஆதரித்து பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது :-

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை....
நான் உங்கள் வீட்டு பெண்ணாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். கடந்த தேர்தலில் ஓட்டு போட்டு தற்போது எவ்வளவு கஷ்டங் களை அனுபவித்து வருகிறீர்கள். அதற்கு மின் சாரம் இல்லாமல் இருளில் தவிக்கும் ஒரு உதாரணம் போதுமே.

சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்...
அ.தி.மு.க. வினர் ஓட்டுக்களை பெற்றுவிட்டால் பிறகு மக்களை சந்திப்பதில்லை. அதனால் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறுபான்மையினரின் பாதுகாவலர்...
சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலை நாட்டியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் சிறுபான்மையினரின் பாது காவலராக விளங்குகிறார்.' எனத் தெரிவித்தார்.

மாற்றத்தை விரும்பும் மக்கள்...
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையத்தில் வாக்குச் சேகரித்த குஷ்பு, ‘கடந்த 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து உள்ளனர். எனவே புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாணவர்கள் பாதிப்பு...
தமிழகத்தில் தற்போதுள்ள மின்தடை காரணமாக சிறு, குறு தொழில்கள் முடங்கி போய் உள்ளன. மின்தடை காரணமாக மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications