நாட்டை கூட்டிப் பெறுக்குவதுதான் மக்களின் வேலையா... மோடிக்கு குஷ்பு சூடு!
ஊட்டி: நாட்டை கூட்டிப் பெருக்குவது, தெரு, சாலையைத் தூய்மைக்குவது நகராட்சியின் வேலை. மக்களின் வேலை அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியாத் திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை திறப்பு நேற்று நடந்தது. அதில் குஷ்பு கலந்து கொண்டு உரையாற்றினார். குஷ்புவின் பேச்சிலிருந்து....
மக்கள் பணி அல்ல
நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது பொதுமக்களின் பணி அல்ல.
நகராட்சியின் வேலை
அந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மக்களின் வரிப்பணம் ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு என்ன அவசியம்
இந்தநிலையில் பொதுமக்கள் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன.
ரோட்டை சுத்தப்படுத்தாதீர்கள்
பொதுமக்களாகிய நீங்கள், ரோட்டில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தத்தான் இருக்கிறீர்களா. மக்கள் ரோட்டை சுத்தப்படுத்தக் கூடாது.
விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்
ரோட்டில் குப்பைகளை போடாதீர்கள் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும். ரோட்டை சுத்தம் செய்யும் வேலை நகராட்சியினுடையது என்றார்.