ஓடிப் போன காதலி கூட திரும்பி வருவா.. பலத்த கரகோஷத்தை வாரிக் குவித்த குஷ்பு!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த பிரமாண்டமான காங்கிரஸ் பொதுக் கூட்டம் அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். அதிலும் நடிகை குஷ்புவின் பேச்சுக்கு பலத்த கைத்தட்டல் கிடைத்தது.

திருவண்ணாமலையில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.

காங்கிரஸாரே எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது. இது பிற கட்சியினரையும் கூட வியப்படைய வைத்தது. இருப்பினும் தலைக்கு 200 ரூபாய் கொடுத்து ஆட்களைத் திரட்டி வந்ததாக கூறுகிறார்கள். ஆனாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு திருவண்ணாமலையில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது ஊர் மக்களை ஆச்சரியப்படுத்தியது.

கூட்டத்தில் குஷ்பு பேச்சுக்கு வழக்கம் போல கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.. அவரது பேச்சிலிருந்து...

துடிக்கும் மோடி அரசு

துடிக்கும் மோடி அரசு

மத்தியில் ஆளும் மோடி அரசு, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் மாற்றம் செய்ய துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டபிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தனர்.

பங்கு போடப் பார்க்கிறார்கள்

பங்கு போடப் பார்க்கிறார்கள்

தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஷும் அதில் கலந்துகொண்டு சிறப்பான சட்டம் என பாராட்டிவிட்டு தற்பொழுது மாற்றம் செய்ய முயற்சி செய்வது, முழுக்க முழுக்க பெரிய முதலாளிகளுக்கு பங்கு போட்டுக்கொடுக்கதான்.

மானம் மரியாதை சந்தோஷம்

மானம் மரியாதை சந்தோஷம்

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலமாக விவசாயிகளின் நிலங்களை மட்டும் எடுக்க நினைக்கவில்லை. விவசாயிகளின் மானம், மரியாதை, சந்தோஷங்களை சேர்த்து எடுக்க முயற்சி செய்கின்றனர்.

325 கோடி ஸ்வாஹா

325 கோடி ஸ்வாஹா

மோடி ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 14 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா... ரூ. 325 கோடி . இவ்வளவு கோடிகளை செலவு செய்து வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி, சொந்த நாட்டுக்குள் ஏன் பயணம் செய்யமாட்டேன் என்கின்றார்.

பதில் சொல்லுங்க பார்ப்போம்

பதில் சொல்லுங்க பார்ப்போம்

ராகுல்காந்தியை காணவில்லை என பாஜகவினர் பிரசாரமே செய்தனர். ஆனால் அப்படிச் சொன்ன பாஜகவினருக்கு ராகுல் காந்தி திரும்பி வந்ததும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர்.

ஓடிப் போன காதலி கூட திரும்பி வருவா

ஓடிப் போன காதலி கூட திரும்பி வருவா

மாநிலத்தில் நடக்கும் ஆட்சி பற்றி யாரோ ஒருவர் கோவில் சுவற்றில் எழுதிய வார்த்தைகளை பாருங்கள். `ஓடிப்போன காதலிக்கூட திரும்பி வருவா... போன கரண்டு திரம்ப வராது...!

இந்த அம்மாவா மக்கள் முதல்வர்

இந்த அம்மாவா மக்கள் முதல்வர்

இந்த அம்மாவை மக்கள் முதல்வர்னு சொல்றாங்க. அவங்க ஆந்திராவுல சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்காக எழுதின கடிதத்தை படிச்சா... மக்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி இல்ல... ஆந்திரா முதல்வரோட கைக்குலுக்குற மாதிரி இருக்கு என்றார் குஷ்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+