என்ஜினியரிங் முதலாமாண்டு மாணவருடன் ஓட்டம் பிடித்த பேராசிரியை- நெல்லையில் நெக்ஸ்ட் பரபரப்பு!
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை ஒருவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவருடன் ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் சந்திரபழம் மகன் சுந்தர்ராஜ். இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்.

அதே கல்லூரியில் ஆலங்குளம் அருகே வடக்குப் பூலாங்குளத்தைச் சேர்ந்த மாரிபுஷ்பம் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பேராசிரியைக்கும், மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. சில தினங்களாக இருவரும் கல்லூரிக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. அவர்களை தேட ஆரம்பித்தனர்.
இதுபற்றி பேராசிரியையின் தந்தை மனுவேல்ராஜ், ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே மாணவன் சுந்தர்ராஜின் தாய் லீலாவதி கடையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேராசிரியை மரியபுஷ்பம், மாணவர் சுந்தர்ராஜை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவருடன் பேராசிரியை மாயமான சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications