அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும்? கேட்கிறார் ராமகிருஷ்ணன்
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி உலக அளவில் அந்த வார்த்தையை டிரெண்ட் செய்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவருக்கு நள்ளிரவில் டீ கடையில் அமர்ந்து டீ சாப்பிட ஆசையாம்.
சென்னை: சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவியில் நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அதிக அளவில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது நிகழ்ச்சிக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டாலும் எதிர்ப்பு குரல்களும் எழாமல் இல்லை.
லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை வைத்து பாடல்களும், டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளும் எடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. அவர்களுக்கு எல்லாம் பதிலுக்கு பதில் கூறி திட்டி வந்தால் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இப்போது சினிமாவில் அவரது நிகழ்ச்சியைப் போல காட்சியமைக்கவே அவரது கோபம் அதிகரித்து விட்டது. இயக்குநர் ஜி.வி. பிரகாஷ், ஆர்.பாலாஜி ஆகியோர் மீது அவரது கோபம் திரும்பியது. இதுதான் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போல சினிமாவில் காட்சியமைத்த இயக்குநர், நடிகரை காட்டமாக திட்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இவர் கொடுத்த பதில் என டுவிட்டரில் பெரும் பஞ்சாயத்து ஆனது.

டுவிட்டருக்கு பை
இந்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத லட்சுமி ராமகிருஷ்ணன், போதுமடா சாமி என்று டுவிட்டருக்கு ஒரு கும்பிடு போட்டார். அதன் பிறகும் அவரை பேட்டி கண்டு சொல்வதெல்லாம் உண்மை பற்றியே கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜிக்கு கேள்வி
'புட் சட்னி' குழுவும் லட்சுமி ராமகிருஷ்ணனை பேட்டி கண்டு அதை யு டுயூப்பில் பதிவேற்றியுள்ளது. அதில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்பட்டது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்றும் கூறியுள்ளார். இது நான்கு சுவர்கள் மூடிய அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். இது ஆர் ஜே பாலாஜியைத்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
டீ சாப்பிட ஆசை
ஆணாக இருந்தால் நள்ளிரவு 2 மணிக்கு டீ கடையில் போய் டீ சாப்பிடுவேன் என்று கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது திரை உலக பயணம், இயக்குநர் ஆனது எப்படி.? சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்துவது ஏன் என்று கூறியுள்ளார்.அவரது முழு பேட்டியையும் பாருங்களேன்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications