அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும்? கேட்கிறார் ராமகிருஷ்ணன்
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி உலக அளவில் அந்த வார்த்தையை டிரெண்ட் செய்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவருக்கு நள்ளிரவில் டீ கடையில் அமர்ந்து டீ சாப்பிட ஆசையாம்.
சென்னை: சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவியில் நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அதிக அளவில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது நிகழ்ச்சிக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டாலும் எதிர்ப்பு குரல்களும் எழாமல் இல்லை.
லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை வைத்து பாடல்களும், டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளும் எடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. அவர்களுக்கு எல்லாம் பதிலுக்கு பதில் கூறி திட்டி வந்தால் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இப்போது சினிமாவில் அவரது நிகழ்ச்சியைப் போல காட்சியமைக்கவே அவரது கோபம் அதிகரித்து விட்டது. இயக்குநர் ஜி.வி. பிரகாஷ், ஆர்.பாலாஜி ஆகியோர் மீது அவரது கோபம் திரும்பியது. இதுதான் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போல சினிமாவில் காட்சியமைத்த இயக்குநர், நடிகரை காட்டமாக திட்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இவர் கொடுத்த பதில் என டுவிட்டரில் பெரும் பஞ்சாயத்து ஆனது.

டுவிட்டருக்கு பை
இந்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத லட்சுமி ராமகிருஷ்ணன், போதுமடா சாமி என்று டுவிட்டருக்கு ஒரு கும்பிடு போட்டார். அதன் பிறகும் அவரை பேட்டி கண்டு சொல்வதெல்லாம் உண்மை பற்றியே கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜிக்கு கேள்வி
'புட் சட்னி' குழுவும் லட்சுமி ராமகிருஷ்ணனை பேட்டி கண்டு அதை யு டுயூப்பில் பதிவேற்றியுள்ளது. அதில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்பட்டது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்றும் கூறியுள்ளார். இது நான்கு சுவர்கள் மூடிய அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். இது ஆர் ஜே பாலாஜியைத்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
டீ சாப்பிட ஆசை
ஆணாக இருந்தால் நள்ளிரவு 2 மணிக்கு டீ கடையில் போய் டீ சாப்பிடுவேன் என்று கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது திரை உலக பயணம், இயக்குநர் ஆனது எப்படி.? சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்துவது ஏன் என்று கூறியுள்ளார்.அவரது முழு பேட்டியையும் பாருங்களேன்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications