இலங்கை பொருட்களை விற்காதே! நீல்கிரீஸ் அங்காடியை முற்றுகையிட்ட மாணவர்கள்!
சென்னை: இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாரில் உள்ள நீல்கிரீஸ் சிறப்பங்காடியை 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் முதலிய திண்பண்டங்களை நீல்கிரீஸ் சிறப்பங்காடி பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே இலங்கை புறக்கணிப்பு குழு நீல்கிரீஸ் நிறுவனத்திடம் இப்பொருட்களை விற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இவைகள் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது , அதனால் இப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்து இருந்தது. எனினும் நீல்கிரீஸ் நிறுவனம் தமிழர்களை கொன்று ஒழித்த நாட்டின் பொருட்களை தமிழர்களுக்கே விற்று வந்தது.

மாணவர்கள் போராட்டம்
இந்நிலையை நீல்கிரீஸ் நிறுவனத்தின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் வகையிலும் அந்நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் நீல்கிரீஸ் கடையின் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடையை புறக்கணிப்போம்
நீல்கிரீஸ் நிறுவனம் உடனடியாக இலங்கை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் அனைத்து நீலகிரி கடைகளையும் தமிழர்கள் நாங்கள் புறக்கணிப்போம் என்ற செய்தியை நிறுவன அதிகாரிகளிடம் சொல்லப்பட்டது.

நீல்கிரீஸ் உறுதி
இம்முறை நீல்கிரீஸ் நிறுவனம் தங்கள் வசம் உள்ள இலங்கை பொருட்களை சில நாட்களில் அகற்றுவோம் என உறுதி அளித்தனர் .

தமிழகத்தில் விற்க கூடாது
இலங்கையில் இருந்து வந்து இங்கு விற்பனை செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு இனி தமிழகத்தில் வரவேற்பு குறையும் எனத் தெரிகிறது .

போராட்டம் தொடரும்
தமிழகத்தில் இருந்து முற்றிலும் இலங்கை பொருட்கள் புறக்கணிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications