சிங்கள கடற்படை மீண்டும் அட்டூழியம்! 47 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது!!
ராமேஸ்வரம்: பாக் ஜலசந்திப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்து அட்டூழிய ஆட்டம் போட்டுள்ளது.

நல்லிணக்க அடிப்படையில் தாம் சிறைபிடித்திருந்த மீனவர்களை விடுவிக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. ஆனால் மீனவர்களை விடுதலை செய்வதாக சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் அவர்களை கைது செய்வதுதான் இலங்கையின் வாடிக்கையாகிவிட்டது.
இலங்கையின் இந்த அட்டூழியத்துக்கு புதிய மத்திய அரசாவது முடிவு காணாதா என்பது தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கையோடு 23 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றது.
இதேபோல் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரையும் படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்ததது. மொத்தமாக ஒரே நாளில் 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications