ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தந்த அப்பலோ அறிக்கை... ஓராண்டின் மறையாத நினைவுகள்!
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பலோ மருத்துவமனை ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் தான் அறிவித்தது.
Recommended Video

சென்னை : ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுவதாக செய்திகள் பரவின, ஆனால் இதில் உண்மையில்லை ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பலோ மருத்துவமனை ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் தான் அறிவித்தது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவில் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரச்சாரத்திற்காகவோ அல்லது வழக்கு விசாரணைக்காகவோ எதுவாக இருந்தாலும் வெளியூர் சென்றால் இரவு வெளியில் தங்காத ஜெயலலிதா முதன்முதலில் செப்டம்பர் 22ம் தேதி இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார்.
அன்று வீட்டைவிட்டு வெளியேறியவர் தான் இரண்டு நாளில் வந்துவிடுவார், நன்றாக இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடித்துவிட்டனர். ஆனால் இறுதியில் 72 நாட்களுக்குப் பிறகு சடலமாகவே வீட்டிற்கு வந்தார் ஜெயலலிதா. செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்த முதல் அறிக்கையை செப்டம்பர் 23ல் வெளியிட்டது அப்பலோ மருத்துவமனை.

வெளிநாட்டுக்கு இல்லை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை. அதில் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுகிறார் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

வீடு திரும்புவார்
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான உணவை அவர் உட்கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் கூறி இருந்தது.

நம்பிக்கை அளித்த அறிக்கை
வீடு திரும்பியது விரைவில் அரசுப் பணிகளைத் தொடங்குவார் என்றும் நம்பிக்கை அளித்திருந்தது மருத்துவமனை. இந்த அறிக்கையால் தான் அதிமுகவினர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று உறுதியுடன் நம்பிக்கையோடு இருந்தனர்.

உண்மை நிலவரமா?
ஒருவேளை அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைபடி ஜெயலலிதா வீடு திரும்பியிருந்தால், இன்றைய அரசியல் பரப்புகள் இல்லாமல் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்பட்டிருக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் நல்ல உடல்நலனுடன் இருந்தார் என்பதே அப்பலோ அறிக்கை சொல்லும் ஆதாரம்.

யார் சொல்வது சரி?
ஆனால் அக்டோபர் 1ம் தேதி முதல் சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று தினகரன் கூறுகிறார். அப்படியானால் மருத்துவமனை சொல்லும் ஜெயலலிதா உடல்நிலை அறிக்கை சரியானதா அல்லது தினகரன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் எழுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications