தடைக்கு எதிர்ப்பு: சென்னை வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.

தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது எனவும் அரசு தடை விதித்துள்ளது.

Lawyers distribute beef on Madras High Court campus

இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.

அப்போது சமைக்கப்பட்ட மாட்டிறைச்சிகளை சாப்பிட்டபடியே மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+