நல்லக்கண்ணு 91 வது பிறந்தநாள்... அரசியல் தலைவர்கள், பல்துறை பிரமுகர்கள் வாழ்த்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு இன்று தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி, தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அரசியல், பத்திரிக்கை, திரைத்துறை பிரபலங்கள் இன்று நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவருடன் பேசியதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ரயில்வேத் துறை தனியார்மயம் ஆகாது என்று தற்போது கூறும் பிரதமர் மோடி, முதலில் அதற்கு மாறான கருத்தை கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினர்.
அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று 91 ஆவது பிறந்த நாள் காணும் தோழர் நல்லகண்ணுவை செல்போனில் தொடர்புகொண்டு 120 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் தங்களின் 100 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கூறினார். அதற்குதோழர் நல்லகண்ணு நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று வைகோவிடம் கூறியதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர்களின் வாழ்த்துக்களைப் பெற்ற நல்லக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கொள்கைகளுக்கு எதிராக தற்போதைய செயல்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார். தொழில்துறை மற்றும் வங்கிகளை நாட்டுமையாக்க வேண்டும் என நேரு திட்டங்களை வகுத்ததாகவும், ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் புகுந்துவிட்டதாகவும் நல்லக்கண்ணு வேதனை தெரிவித்தார். இத்தகைய செயல்கள் நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications