ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு- சென்னையில் யு.எஸ்.தூதரகத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள் போராட்டம்!
சென்னை: அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையில் இடதுசாரி கட்சிகள் அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமா நாளை இந்தியா வருகை தருகிறார். ஒபாமாவின் இந்திய வருகைக்கு இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இடதுசாரிகள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , சிபிஐ(எம்எல்) லிபரேசன் மற்றும் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதே போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடதுசாரிகள் கூட்டாக போராட்டம் நடத்தினர். முன்னதாக நேற்று மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications