தீபாவளி: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: அமைச்சர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்களும் பயனடையும் வகையில் தீபாவளிக்கு 8,350 சிறப்பு பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளில் பண்டிகையையொட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இது குறித்து புகார் கொடுக்க சிறப்பு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications