மதுவிலக்கில் திமுக-அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிறது: திருமாவளவன்
சென்னை: மே தினத்தை முன்னிட்டாவது கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக - அதிமுக கட்சிகள் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையில் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்மொழிந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டலிலிருந்து மீட்டெடுப்பதும் முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். தொழிலாளர்களை முதலாளிகள் மட்டும் சுரண்டுவதாகக் கருதக் கூடாது. அரசும் பல வழிகளில் சுரண்டிக் கொண்டே வருகிறது. அதில் ஒன்று தான் டாஸ்மாக் மதுக்கடை.

சமூகத்தில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த கூலியைப் பிடுங்கிக்கொள்ள அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. கூலித் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் நாளெல்லாம், பொழுதெல்லாம் பாடுபட்டு பெற்ற கூலியை மதுக் கடைகளில் கொடுத்துவிட்டு சாலையில் மயங்கிக் கிடக்கும் அவலத்தை நாம் பார்க்கிறோம்.
மே தினத்தை முன்னிட்டாவது கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக - அதிமுக கட்சிகள் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையில் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாடே கொந்தளித்து மதுக் கடைகளை மூடச் சொல்லிப் போராடியபோது மவுனம் சாதித்து வந்த தமிழக முதல்வர் அவர்கள் தற்போது படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். இந்தியாவிலேயே மக்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். அதனால் தான் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்னெடுத்த விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் ‘சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்' உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளோம். அத்துடன் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு, நாடு முழுவதும் குறிப்பாக, ஒன்றிய அளவிலும் தீவிர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளோம்.
மேலும் மது ஆலைகள் தொடங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்வதுடன், டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளோம். ஆகவே, தொழிலாளர்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யத் துடிப்பதுடன் மதுவிலக்குக் கொள்கையில் தெளிவற்ற நிலையிலிருக்கும் திமுக-அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications