தமிழக உள்ளாட்சிக்கு அக்., 24க்குள் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனவும் அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3வது வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து நடத்த வேண்டும் என்றும், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த இந்த வழக்கு விசாரணையில், மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் செப்டம்பர் 3வது வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி வரையறை உடனடியாக அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications