நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியாளர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழக அரசு உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதற்கேற்ப, வரும் 18-ஆம் தேதி புதன்கிழமை நீலகிரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்குப் பதிலாக 2014 ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும். இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 18-ஆம் தேதி புதன்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் வழக்கம்போல நடைபெறும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் இன்று ஆருத்ரா தரிசனம் கொண்டாடப் பட இருப்பதால் அங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications