மான்கறியா.. ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. மொத்த பேரையும் அலற விட்ட ஆம்பூர் இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்
பூனைக்கறி விற்ற நரிக்குறவர் இளைஞர் கைது செய்யப்பட்டார்
ஆம்பூர்: ஊரடங்கு சமயத்தில் மான் கறி என்று நினைத்து ஆசை ஆசையாக சாப்பிட்ட மக்கள் அத்தனை பேரும் ஏமாந்து விட்டனர்.. சாப்பாட்டு விஷயத்தில் ஏமாற்றி மக்களுக்கு கிலியை ஏற்படுத்திய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்பூர் பகுதிகளில் சில நாட்களாகவே நாடோடி இனத்தை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக மான் கறி விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.. ஒரு கிலோ மான்கறி 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் மான்கறியை விரும்புவதால், வியாபாரம் சக்கை போடு போடுவதாகவும் புகார் வரவும் போலீசார் அதிரடியாக களமிறங்கினர்.

ஆம்பூர்
போலீசார் கேள்விப்பட்டதைவிட பொதுமக்களில் நிறைய பேர் மான்கறியை ரசித்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. அதனால் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்... தனிப்படை வைத்து கண்காணிக்கப்பட்டதில் மணிகண்டன் என்ற இளைஞரின் பெயர் அடிபட்டது. அதனால் அவர் வீட்டை தேடி கொண்டு போலீசார் சென்றனர்.

மான்கறி
அப்போது மணிகண்டன் ஒரு பூனையை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.. இதை பார்த்து அதிர்ந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், இவ்வளவு நாளாக விற்று கொண்டிருந்தது மான்கறி இல்லை, பூனைக்கறிதான் என்றார். இவர் பெயர் மணிகண்டன், சோலூர் அருகே உள்ள நமாஸ்மேடு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர். 25 வயதாகிறது.

பூனைகறி
மான் வேட்டைக்கு போகிறேன் என்று சொல்லி பூனையை வேட்டையாடி அந்த இறைச்சியை தந்துள்ளார்.. மக்களும் அது தெரியாமல் மான்கறி என்று நம்பி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தேடி வருகிறார்கள். ஒரு கிலோ பூனை கறி 500 ரூபாய்க்கு விற்று நல்ல லாபம் சம்பாதித்துள்ளார்.

கைது
இது அறியாமல் நிகழ்ந்த சம்பவம் என்றும் கூறிவிட முடியாது.. மான்கறி வேண்டும் என்று கேட்டது ஒருசில மக்கள்தானாம்.. வனவிலங்குகளின் இறைச்சியை வாங்கி சாப்பிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்... தினமும் இந்த அளவுக்கு எப்படி மான்கறி எளிதாக கிடைக்கும் என்றுகூட யோசிக்காமல் மக்கள் பூனைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications