ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் சென்னை வந்த லண்டன் டாக்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் மீண்டும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான அப்பல்லோ மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும் லண்டனை சேர்ந்த டாக்ரடர் ரிச்சர்ட் பியல் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர்.

London doctor returns to Chennai to treat Jaya

பியல் லண்டனுக்கும் சென்னைக்குமாக பயணம் மேற்கொண்டுள்ளார். 3வது முறையாக சென்னை வந்த அவர் கடந்த 26ம் தேதி லண்டனுக்கு சென்றார். இதையடுத்து எய்ம்ஸ் டாக்டர் கில்நானியும் டெல்லிக்கு கிளம்பினார்.

இந்நிலையில் பியல் தீபாவளி அன்று சென்னை திரும்பி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார். நேற்றும் அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் நேற்று காலை 11.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு வந்தார். மாலை 6.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அவர் நள்ளிரவு சிங்கப்பூருக்கு கிளம்பினார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த பிசியோதெரபி நிபுணர் சீமா மற்றும் ஒரு பெண் பிசியோதெரபி நிபுணரும் நேற்று இரவு சென்னை வந்தனர்.

அவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+