வேலூர் வாணியம்பாடி அருகே நேற்றிரவு விபத்து.. லாரி கவிழ்ந்து 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் வாணியம்பாடி அருகே நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் லாரி கவிழ்ந்து 8 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலம், நாயனூரில் இருந்து, மாங்காய் ஏற்றிக் கொண்டு, லாரியில் தமிழகம் நோக்கி வந்துள்ளனர். லாரியில் 20 க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். வாணியம்பாடி அருகே வரும் போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் டிரைவர் லாரியை வேகமாக நிறுத்த முயற்சித்துள்ளார்.

Lorry accident kills 12 people near Vellore

இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி உள்ளது. இதனால் 70 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து சறுக்கிக் கொண்டு சென்றுள்ளது. இதனால் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். படுகாயம் அடைந்த 10க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள், இறந்தவர்கள் விவரம் தெரியவில்லை. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+