டெல்லியிலிருந்து சைக்கிள் லோடு ஏற்றி வந்த லாரி ஒட்டுநர் படுகொலை!
கரூர்: டெல்லியிலிருந்து சைக்கிள் லோடு ஏற்றி வந்த லாரியின் டிரைவர், கரூர் அருகே நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பழனிசாமி. லாரி ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். டெல்லியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மிதிவண்டிகளை லாரியில் ஏற்றி வரும் போது அரவக்குறிச்சி அருகே சுங்கசாவடியை அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி இறங்கி சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து அவருடன் வந்த காட்டுபுத்தூரை சேர்ந்த துனை ஓட்டுநர் சதீஷ் குமார் லாரியை விட்டு இறங்கி தேடியுள்ளார். அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்களிடம் தகவல் சொல்ல அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த காட்டு பகுதியில் .தலையில் ஏதோ ஆயுதத்தால் தாக்கி கழுத்தை நெறித்து பழனிசாமி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஜோஷி நிர்மல் குமார் சம்பவ இடத்திற்க்கு உடனடியாக விரைந்து வந்தார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரனை செய்து வருகின்றனர்.
பழனிசாமி வழிப்பறி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது எதாவது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications