சென்னையில் கல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து – டிரைவர் உடல் கருகி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த திரிசூலத்தில் கல் உடைக்கும் ஆலைக்கு கல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பம் உரசியதில், லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தனியார் கல் உடைக்கும் நிறுவனத்துகு கற்களை ஏற்றி வந்த லாரி, கற்கனை கொட்ட முயற்சிக்கும்போது, லாரியின் ஒரு பகுதி மின்கம்பியில் உரசியதால், லாரியின் முன்பகுதி தீப்பிடித்தது.
அப்போது கடுமையான புகை மூட்டம் வந்ததால் தப்பிக்க முயற்சி செய்த டிரைவர் வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்தப் பகுதியில்தான் லாரி பள்ளத்தில் விழுந்து கிளீனர் உயிரிழந்தார். இந்தப் பகுதிகளில் மின் கம்பிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications