லாரிகள் வேலை நிறுத்தம்.. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விர்ர்ர்
லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் வருகை குறைந்ததால், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பின்னரும், இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றானர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு வருகிற காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் ஊடகங்களிடம் கூறுகையில், "லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளின் எண்ணிகை குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு வழக்கமாக 350 லாரிகள் வரும். ஆனால், இரவு 220 லாரிகள் மட்டுமே வந்ததால், காய்கறிகளின் வரவும் குறைந்துள்ளது. இதனால், கேரட், பீட்ரூட், பீன்ஸ், தக்காளி ஆகிய காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது." என்று கூறினார்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்களின் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் கோரிகையைப் பரிசீலிக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications