கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு.. பகீர் அறிக்கை தாக்கல்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கூடங்குளம்: தகுதியான தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்தாத காரணத்தினாலும், மின் உற்பத்தி பலகாலம் நிறுத்தப்பட்டதாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே பல நாட்கள் கிட்டத்தட்ட 60 அணுமின் நிலையம் மூடப்பட்டது. பிறகுதான் தெரியவந்தது, எரிபொருள் நிரப்புவது என்பது வல்லுனர்களின் தகுதித்திறன், அதன் எல்லைகளை பொறுத்தும் என்பது. அதனால் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் இருக்கிறோமே என்று காலப்போக்கித்ன் இந்திய அணுமின் கழகம் உணர தொடங்கியது. அதற்கு பிறகுதான் ரஷ்ய நாட்டிலிருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களை அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. ஏ.எஸ். எனும் நிறுனத்துடன் தான் இந்த ஒப்பந்தத்தினை இந்திய அணுமின் கழகம் போட்டது. ஆனால் இதற்கான செலவு76 சதவீதம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் அணுமின் நிலையம் மூடப்பட்டிருந்த காலத்தில் போடப்பட்டுவிட்டது. அதனால் நேரமின்மை பற்றாக்குறையாலும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைவட நடத்த முடியாமல் போனதாலும் இந்த அதிக செலவு இந்திய அணுமின் கழகத்தின் தலைமேல் வந்து விழுந்தது. அதனால் அதை ஏற்று கொள்ள வேண்டிய நிலையில்தான் அணுமின்கழகம் உள்ளது. விளைவு... 60 நாட்கள் அணுமின் நிலையத்தை மூடுவதற்கு பதிலாக 222 நாட்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது அணுமின் நிலையத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது".
இவ்வாறு தலைமை கணக்கு தணிக்கையர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications