சிரிய தாக்குதலுக்கு எதிரான போராட்டம்: பிஞ்சுக் குழந்தைகளுடன் பெருந்திரளாக பங்கேற்ற முஸ்லிம் பெண்கள்
Recommended Video

சென்னை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டி சென்னை மற்றும் சேலத்தில் போராட்டம் நடத்தின. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.
சிரியாவில் தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள இடங்களை கைப்பற்றும் விதமாக அந்த நாட்டு அரசு உள்நாட்டு போர் நடத்தி வருகிறது. சிரியாவிற்கு ரஷ்யா போர் உதவிகளை செய்து வருகிறது.

கடந்த 1 வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் போரினால் சுமார் 700 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அடாவடித்தனத்தை அரங்கேற்றி வரும் சிரியா அரசு நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை தடுக்கக் கோரி ஐ.நா. பெருமன்றத்தை வலியுறுத்தும், அங்கு நடக்கும் தாக்குதல்களுக்கு ஆயுதம் அளித்து வரும் ரஷ்யாவைக் கண்டித்தும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இன்று சென்னையில் ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதுபோல சென்னையில் சேப்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், சேலத்திலும் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், புகைப்படத்திலும், வீடியோவிலும் குழந்தைகள் அடிபட்டுக் கதறும் காட்சிகள் மிகவும் மனதை வருத்துவதாகவும், தேவையில்லாமல் தனது சொந்த நாட்டு மக்களையே ஆயுதம் கொண்டு அழித்து வரும் சிரிய அதிபரை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.
மேலும், ஐ.நா.,வின் அமைதிப் படை உடனடியாக தலையிட்டு சிரியாவில் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications