தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் தாராளம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆரம்பித்துவிட்டனர்.

இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாளை தீபாவளி என்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறப்பு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுவதால் கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications