எழுந்து வா.. கோஷமிட்டபடி கருணாநிதிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
திமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியதை தொடர்ந்து தொண்டர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.
நேற்றிரவு முழுவதும் தலைவா எழுந்து வா என முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் தொண்டர்களின் வருகை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
200 போலீசார்
காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து
அரசியல் கட்சியினரும் நேற்றிரவு முதல் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டும் என அவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்கள் வருகை
இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
உடன் பிறப்பே
ஆண்கள் பெண்கள் என பலரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் காவேரி மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர். தங்களின் தலைவர் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என கையசைப்பார் என தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.