ஜல்லிக்கட்டை தடுக்க சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் போலீஸ் குவிப்பு!!
சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிறாவயல் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறும என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுப்பதற்காக 700 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடுப்பபதற்காக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 700க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
காவலர்கள் குவிப்பால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications