15 வயது காதலி கர்ப்பம்.. கருக்கலைப்பு செய்யப்போன இடத்தில் 17 வயது காதலன் ஓட்டம்!
சேலம்: 15 வயது காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கருக்கலைப்பு செய்யும் நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய 17 வயது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வலசையூரைச் சேர்ந்த 15வயது சிறுமி இளங்கோ நகர் பகுதியிலுள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான, பட்டு நூல் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தாதகாப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பட்டு நூலை தரம் பிரிப்பதற்காக, சக்திவேலின் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று வருவார்.
இந்த நிலையில், அங்கு பணியாற்றிய 15 வயது பெண்ணுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து உல்லாசம் அனுபவித்தனர். இதனால், அந்த பெண் கருவுற்றார்.
இதை அறிந்த காதலன், வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காதலியை அழைத்த சென்று, கர்ப்பத்தை கலைக்க முயற்சித்தார். அங்கிருந்த டாக்டர்கள், காதலர், காதலி குறித்த முழு விவரத்தையும் கேட்டுள்ளனர்.
இதனால், பயந்துபோன காதலன், நைசாக, காதலியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பியோடிவிட்டார். இதை அறிந்து அதிர்ச்சியானார் அந்த பெண். கோபமடைந்த டாக்டர்கள், சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோர் முகவரியை கேட்டுள்ளனர். கொடுக்காவிட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
அந்த பெண்ணோ தேவிகா இந்த தகவல் தன்னுடைய பெற்றோர்களுக்கு தெரியக்கூடாது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். தர்மசங்கடத்தில் சிக்கிய மருத்துவர்கள், சேலத்திலுள்ள பெண்கள் நல அமைப்பை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்த அவர்கள், சிறுமியை மீட்டு, காரில் அழைத்து சென்றனர். அப்போது அந்த சிறுமி முரண்டு பிடித்து அழுது புரண்டதில் எதிர்பாராதவிதமாக, சிறுமியின் கர்ப்பம் கலைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் தேவிகாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் தேவிகா அளித்த புகாரின் அடிப்படையில், காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.