வங்கக் கடலில்.. தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்தமாக மாறியது!
சென்னை: வங்கக் கடலின் தென் கிழக்கில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனாவின் தென் மேற்குப் பகுதிகளை சுழற்றியடித்த ஹையான் புயலுக்குப் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தமானது மேலும் வலுவடையும் என்றும், ஒரு புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வார இறுதியில் இது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தமாக மாறிய நிலையில் தமிழக கடலோரத்தைக் கடக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications