சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஐவர் பலி… சிறுவன் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 5பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெங்கடேசன் என்பவர் மறைமலைநகரில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். அதனால், கடைக்கு பயன்படுத்தப்படும், 8 எரிவாயு சிலிண்டர்களையும் வீட்டில் வைத்துச் சென்றிருந்தார்.

சனிக்கிழமை இரவு வீடு திரும்பிய அவர், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை உணராமல் மின் சுவிட்சை போட்டதால், விபத்து நேரிட்டது. இதில், 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், வெங்கடேசன், அவரது மனைவி, குழந்தை மற்றும் அண்டைவீட்டு குழந்தை ஆகிய நான்கு பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி நேற்று உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 17 சதவிகித தீக்காயமே சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+