பாமகவின் 2வது லிஸ்ட்: விழுப்புரத்தில் வடிவேல் ராவணன், மயிலாடுதுறையில் அகோரம் போட்டி
சென்னை: பாமக தனது 2வது லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்டோபர் 21ம் தேதி தனது முதல் வேட்பாளர் பட்டியலை அது வெளியிட்டது.
முதல் பட்டியலில் ஐந்து வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆரணியிலும், இன்னொரு மாஜி அமைச்சர் ஆர்.வேலு அரக்கோணத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி லோக்சபா தொகுதியில், பாமக சார்பில் அனந்தராமனும், சேலம் தொகுதியில், ஆர். அருளும் போட்டியிடுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தனது கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கூட்டணியில் இடம் பெறும் அமைப்புகள், கட்சிகள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். கூட்டணிக்கு சமூக ஜனநாயகக் கூட்டணி என்று ராமதாஸ் பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது 2வது வேட்பாளர் பட்டியலை பாமக வெளியி்ட்டுள்ளது. விழுப்புரம் தனி தொகுதியில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுவார் என்றும், மயிலாடுதுறையில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அகோரம் போட்டியிடுவார் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications